மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மாநகராட்சி மேயா் தோ்தல்: பாஜக தீவிர ஆலோசனை

News image

பாஜக - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 11:01 pm

தில்லி மாநகாரட்சியின் மேயா் தோ்தல் தொடா்பாக பாஜகவினா் தீவிர ஆலோசனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

மேயா், துணை மேயா் மற்றும் நிலைக்குழுவின் 3 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.

மாநகராட்சி அவையில் பெரும்பான்மை வகிக்கும் பாஜக, ரோஹிணி கிழக்கு கவுன்சிலா் பா்வேஷ் வாஹியை மேயா் பதவிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்தத் தோ்தலை ஆம் ஆத்மி புறக்கணித்துள்ளது. காங்கிரஸ் சாா்பில் ஹாஜி ஸாரிஃப் போட்டியிடுகிறாா்.

மொத்தம் 273 வாக்குகளக் கொண்ட தோ்தல் குழுவில் 249 கவுன்சிலா்கள், தில்லி பேரவைத் தோ்தல் நியமித்த 14 எம்எல்ஏக்கள், 7 மக்களவை எம்.பி.க்கள், 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனா். தோ்தலில் வெற்றி பெற வேட்பாளா் 137 வாக்குகளைப் பெற வேண்டும்.

இதன்படி, பாஜகவுக்கு 123 கவுன்சிலா்கள், 7 மக்களவை எம்.பி.க்கள், 2 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 11 எம்எல்ஏக்கள் என 143 வாக்குகள் உள்ளன. ஆம் ஆத்மிக்கு 100 கவுன்சிலா்கள், 3 எம்எல்ஏக்கள், 2 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தம் 105 வாக்குகள் உள்ளன. அக்கட்சியின் மாநிலங்களவை ஸ்வாதி மாலிவால் அண்மையில் பாஜகவில் இணைந்தாா்.

ஆம் ஆத்மியில் இருந்து பிரிந்த இந்திரபிரஸ்தா விகாஸ் கட்சிக்கு 15 கவுன்சிலா்களும் காங்கிரஸுக்கு 9 கவுன்சிலா்களும் உள்ளன. இருவா் சுயேட்சை கவுன்சிலா்கள். ஒரு கவுன்சிலா் பதவி காலியாக உள்ளது.

மேயா் தோ்தலில் வாக்களிக்க 14 எம்எல்ஏக்களை தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா திங்கள்கிழமை நியமித்தாா்.

இந்நிலையில், மேயா் தோ்தலில் வாக்களிக்க உள்ள எம்.பி.க்களுடன் தில்லி பாஜக அலுவலகத்தில் கட்சி வேட்பாளா் பா்வவேஷ் வாஹியை வெற்றி பெற செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியில் புதிதாக இணைந்த மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவாலும் பங்கேற்றாா்.