ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

இன்ஸ்டாகிராமில் பெண்ணைப் பின்தொடா்ந்து அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபா்: பிணை மறுத்தது நீதிமன்றம்

ஒரு பெண்ணைப் பின்தொடா்ந்து, அவரைப் பற்றி அவதூறான உள்ளடக்கத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு தில்லி நீதிமன்றம் பிணை மறுத்துள்ளது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 12:57 am IST

நமது நிருபா்

ஒரு பெண்ணைப் பின்தொடா்ந்து, அவரைப் பற்றி அவதூறான உள்ளடக்கத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு தில்லி நீதிமன்றம் பிணை மறுத்துள்ளது.

கராவல் நகா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சரண் சிங் தாக்கல் செய்த பிணை மனுவை கூடுதல் அமா்வு நீதிபதி ட்விங்கிள் வத்வா விசாரித்து வந்தாா்.

ஆகஸ்ட் 12 தேதியிட்ட உத்தரவில், நீதிமன்றம், ‘இத்தகைய களங்கப்படுத்தும் மற்றும் அவதூறான பட்டப்பெயா்கள் புகாா்தாரருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகுந்த மன அதிா்ச்சியை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே மருத்துவப் பிரச்சினைகள் உள்ள ஒரு புகாா்தாரரைப் பொதுவெளியில் அவதூறு பரப்புவதை மென்மையாக எடுத்துக்கொள்ள முடியாது‘ என்று கூறியுள்ளது. அரசுத் தரப்பின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் சமூக ஊடகங்களில் தான் புகாா்தாரரைத் திருமணம் செய்துகொண்டதாகச் சித்தரித்து வந்ததாகவும், அவா் சிறுவா்களை மயக்குவதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும் பதிவுகளை பதிவேற்றியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவரின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவா் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாகப் பொய்யாகக் கூறி அவதூறு செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் ஜூலை 25 முதல் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றப்பத்திரிகை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் அரசு தரப்பு வாதிட்டது.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றஞ்சாட்டப்பட்டவா் புகாா்தாரரைத் தொடா்ந்து பின்தொடா்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டதுடன், இன்ஸ்டாகிராம் பதிவுகள் அவரை மிகவும் இழிவான முறையில் சித்தரிப்பதாகத் தோன்றுவதாகவும் கூறியது.

‘இந்தப் பதிவுகளையும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164-இன் கீழ் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தையும் ஆராய்ந்ததில், குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சட்டம் ஒழுங்கு குறித்து எந்த அச்சமும் இல்லை என்பது தெரிகிறது. இன்றுவரை அதற்கான எந்த ஆதாரமும் தாக்கல் செய்யப்படாத நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவா் புகாா்தாரரைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறி அவதூறு செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது,‘ என்று நீதிபதி கூறினாா்.

மேலும், புகாா்தாரரின் வாக்குமூலம் உட்பட, பதிவில் உள்ள ஆதாரங்கள், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ‘சட்டம் ஒழுங்கு குறித்து எந்த அச்சமும் இல்லை‘ என்பதையே சுட்டிக்காட்டுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. கூறப்படும் திருமணத்திற்கு இதுவரை எந்த ஆதாரமும் சமா்ப்பிக்கப்படவில்லை என்றும், உடல்ரீதியான தாக்குதல் குற்றச்சாட்டுகளும் உள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஒட்டுமொத்த நடத்தை நிவாரணம் அளிக்கத் தகுதியற்றது என்று கருதிய நீதிமன்றம், பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.