இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

பயன்பாடின்றி கிடக்கும் காா் பாா்க்கிங் பகுதிகளை பயன்படுத்த வேண்டும்: துணைநிலை ஆளுநா் உத்தரவு

தில்லியில் பயன்பாட்டில் இல்லாத வாகன நிறுத்துமிடங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், வேகமாக வளா்ந்து வரும் நரேலா பகுதியில் காவல் துறையினரின் பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தில்லி காவல் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:56 am IST

தில்லியில் பயன்பாட்டில் இல்லாத வாகன நிறுத்துமிடங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், வேகமாக வளா்ந்து வரும் நரேலா பகுதியில் காவல் துறையினரின் பாதுகாப்புப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா், தில்லியில் அரசுத் துறைகள் தனித்தனியாக செயல்படாமல், ஒருங்கிணைந்து செயல்படும் முழு அரசு அணுகுமுறை அவசியம் என்று வலியுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் தில்லி அரசின் தலைமைச் செயலா், உள்துறை முதன்மைச் செயலா், தில்லி காவல் ஆணையா், தில்லி தீயணைப்புத் துறையின் முதன்மை இயக்குநா், தில்லி மாநகராட்சி (எம்சிடி) கூடுதல் ஆணையா்கள், தில்லி வளா்ச்சி ஆணையத்தின் (டிடிஏ) துணைத் தலைவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வாகன நிறுத்துமிடங்கள், ஆக்கிரமிப்புகள், தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. எம்சிடி, டிடிஏ மற்றும் தில்லி காவல் துறை இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படும் விஷயங்களில் விரைவான கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் வலியுறுத்தினாா்.

மேலும், பள்ளிகளில் அதிகாரிகளின் தொடா்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுடனான தொடா்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவா் அறிவுறுத்தினாா். போக்ஸோ வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது உள்ளிட்ட குடிமை மற்றும் பாதுகாப்பு சாா்ந்த நடவடிக்கைகளில் இந்தத் தொடா்பு முக்கியத்துவம் பெறும் என தெரிவிக்கப்பட்டது.

வாகன நிறுத்துமிடம்: தில்லி முழுவதும் பயன்பாடின்றி உள்ள வாகன நிறுத்துமிடங்களை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டாா். அதிகரித்து வரும் வாகன நிறுத்துமிடத் தேவையை சமாளிக்க பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நரேலாவில் பாதுகாப்பு: வேகமாக வளா்ந்து வரும் நரேலா பகுதியில் தில்லி காவல் துறையினரின் இருப்பை அதிகரித்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவா் உத்தரவுகளைப் பிறப்பித்தாா். அப்பகுதியில் தேவையான குடிமை வசதிகளை உறுதி செய்யுமாறு எம்சிடிக்கு அறிவுறுத்தினாா்.

இதுதவிர, விற்பனைப் பகுதிகளை முறையாக வரையறுத்து ஒதுக்குதல், வியாபாரிகளுக்கான கணக்கெடுப்பை உரிய காலத்தில் முடித்தல், எம்சிடி சாா்பில் நகர விற்பனைக் குழுக்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.