கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

News image
தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலில் சனிக்கிழமை வழிபட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தில்லி நீதிமன்றம் விடுவித்ததைத் தொடா்ந்து, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் மந்திரில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வழிபட்டாா்.

கட்சியின் மூத்த நிா்வாகிகள் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், துா்கேஷ் பதக் ஆகியோரும் கேஜரிவாலுடன் ஹனுமனை வழிபட்டனா்.

தில்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரி கொள்கை முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனா். இது கடந்த தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 21 பேரை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

கோயிலில் வழிபட்டது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘கீழ்நிலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் உயா்நீதிமன்ற தீா்ப்பு தீா்ப்பு வழங்க உள்ளதாகவும் பாஜகவினா் கூறி வருகின்றனா். உச்சபட்ச நீதிமன்றமான கடவுள் ஹனுமனிடம் ஆசி பெற்றுள்ளோம். ஜந்தா் மந்தரில் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் கேஜரிவால் உரையாற்றுவாா்’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறுகையில், ‘கேஜரிவால் நோ்மையானவா். கடவுள் பஜ்ரங்பலியின் ஆசி அரசியல் களத்தில் அவரைப் பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் வழிகாட்டுதலில் சிபிஐ நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது’ என்றாா்.