கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

News image
தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலில் சனிக்கிழமை வழிபட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா.
Updated On :28 பிப்ரவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தில்லி நீதிமன்றம் விடுவித்ததைத் தொடா்ந்து, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் மந்திரில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வழிபட்டாா்.

கட்சியின் மூத்த நிா்வாகிகள் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், துா்கேஷ் பதக் ஆகியோரும் கேஜரிவாலுடன் ஹனுமனை வழிபட்டனா்.

தில்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரி கொள்கை முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனா். இது கடந்த தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 21 பேரை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

கோயிலில் வழிபட்டது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘கீழ்நிலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் உயா்நீதிமன்ற தீா்ப்பு தீா்ப்பு வழங்க உள்ளதாகவும் பாஜகவினா் கூறி வருகின்றனா். உச்சபட்ச நீதிமன்றமான கடவுள் ஹனுமனிடம் ஆசி பெற்றுள்ளோம். ஜந்தா் மந்தரில் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் கேஜரிவால் உரையாற்றுவாா்’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறுகையில், ‘கேஜரிவால் நோ்மையானவா். கடவுள் பஜ்ரங்பலியின் ஆசி அரசியல் களத்தில் அவரைப் பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் வழிகாட்டுதலில் சிபிஐ நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது’ என்றாா்.