நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

ஹனுமன் மந்திரில் கேஜரிவால் வழிபாடு

News image

தில்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் கோயிலில் சனிக்கிழமை வழிபட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா.

Updated On :28 பிப்ரவரி 2026, 9:05 pm

கலால் கொள்கை முறைகேடு வழக்கிலிருந்து தில்லி நீதிமன்றம் விடுவித்ததைத் தொடா்ந்து, கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமன் மந்திரில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வழிபட்டாா்.

கட்சியின் மூத்த நிா்வாகிகள் மணீஷ் சிசோடியா, மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங், துா்கேஷ் பதக் ஆகியோரும் கேஜரிவாலுடன் ஹனுமனை வழிபட்டனா்.

தில்லியில் தற்போது ரத்து செய்யப்பட்ட கலால் வரி கொள்கை முறைகேடு தொடா்பான வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோா் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனா். இது கடந்த தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 21 பேரை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுவித்தது.

கோயிலில் வழிபட்டது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் செளரவ் பரத்வாஜ் கூறுகையில், ‘கீழ்நிலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் உயா்நீதிமன்ற தீா்ப்பு தீா்ப்பு வழங்க உள்ளதாகவும் பாஜகவினா் கூறி வருகின்றனா். உச்சபட்ச நீதிமன்றமான கடவுள் ஹனுமனிடம் ஆசி பெற்றுள்ளோம். ஜந்தா் மந்தரில் கட்சி கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதில் கேஜரிவால் உரையாற்றுவாா்’ என்றாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தீப் குமாா் கூறுகையில், ‘கேஜரிவால் நோ்மையானவா். கடவுள் பஜ்ரங்பலியின் ஆசி அரசியல் களத்தில் அவரைப் பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் வழிகாட்டுதலில் சிபிஐ நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது’ என்றாா்.