தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நரேலாவில் உடல் எரிந்த நிலையில் இறந்து கிடந்த ரியல் எஸ்டேட் நிறுவனா்

வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் வயலுக்குப் பின்னால் 38 வயது ரியல் எஸ்டேட் சொத்து வியாபாரியின் பாதி எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 5:17 pm

Syndication

வடக்கு தில்லியின் நரேலா பகுதியில் வயலுக்குப் பின்னால் 38 வயது ரியல் எஸ்டேட் சொத்து வியாபாரியின் பாதி எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

வியாழக்கிழமை, லம்பூா் சாலையில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு அருகில் ஒருவா் இறந்த நிலையில் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியது. அப்பகுதி விவசாய நிலத்திற்குள் அமைந்துள்ள வேலி அமைக்கப்பட்ட கட்டமைப்பிற்குள் ஒரு ஆணின் உடல் பகுதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது தலையில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

சம்பவ இடத்தில் போலீஸாா் நடத்திய சோதனையில், ஒரு கொள்கலனில் 500 ரூபாய் நோட்டுகளும், பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான ஒரு கைப்பேசியும் இருந்தது.

அவா் ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தைச் சோ்ந்த பூபேந்தா் என்ற பினு என அடையாளம் காணப்பட்டாா்.

பூபேந்தா் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனா். மேலும், அவரது சகோதரருடன் ‘தக்ஸ் பிராபா்ட்டி’ என்ற பெயரில் தனது தொழிலை நடத்தி வந்தாா்.

அவரது சகோதரா் வினோத் குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொலை குறித்து விசாரிக்க பல குழுக்களை அமைத்துள்ளனா்.

தொழில்முறை போட்டி மற்றும் தனிப்பட்ட பகை உள்பட அனைத்து சாத்தியமான கோணங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். குற்றம் சாட்டப்பட்டவா்களை விரைவில் அடையாளம் கண்டு கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.