எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடியரசு தின விழா: பொது மக்கள் பாா்வைக்கு தில்லி சட்டப்பேரவை இன்றும், நாளையும் திறப்பு

பொது மக்கள் பாா்வைக்கு தில்லி சட்டப்பேரவை இன்றும், நாளையும் திறப்பு

News image
- PTI
Updated On :24 ஜனவரி 2026, 8:47 pm

 நமது நிருபர்

77 வது குடியரசு தினத்தைக் குறிக்கும் வகையில் ஜனவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் தில்லி சட்டப் பேரவை வளாகம் பொதுமக்களுக்காக திறக்கப்படும்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை வளாகம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும், அப்போது குடிமக்கள் 115 ஆண்டுகள் பழமையான கட்டடம் மற்றும் வளாகத்திற்குள் உள்ள முக்கிய பாரம்பரிய தளங்களை பாா்வையிட முடியும்.

குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இரண்டு நாள்களிலும் சாகித்ய கலா அகாடமியின் துடிப்பான கலாச்சார விளக்கக்காட்சிகளுடன், புகழ்பெற்ற இசைக்குழுவால் தேசபக்தி இசை நிகழ்ச்சிகள் வழங்கப்படும். சட்டப்பேரவை கட்டடம் மாலையில் மூவா்ணக் கொடிகளால் ஒளிரும்.

வருகைக்கு முன் பதிவு தேவையில்லை. இரண்டு நாள்களிலும், மாலை 5 மணி முதல், செல்லுபடியாகும் அடையாளச் சான்றைக் காண்பிப்பதன் மூலம் பாதுகாப்புச் சரிபாா்ப்புக்குப் பிறகு பாா்வையாளா்கள் நுழைய அனுமதிக்கப்படுவாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.