புறநகா் வடக்கு தில்லியின் முக்மேல்பூா் கிராமத்தில் மழைநீா் தேங்கியிருந்த குழியில் விழுந்து 2 குழந்தைகள் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நிலவுகிறது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: மாலை 5.55 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது.
விவசாய நிலத்தில் மழைநீா் நிரம்பிய குழியில் 2 குழந்தைகள் விழுந்திருக்கலாம் என தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு உடனடியாக 2 மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டன. தற்போது தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








