காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தில்லியில் பல இடங்களில் மழை: மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு

தில்லியில் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, இதே போன்ற வானிலை நிலைமகள் மாலை நேரம் வரை பல மாவட்டங்களில் தொடரும் என அறிவித்தது.

News image

தில்லியில் பெய்த மழையின்போது இந்தியா கேட் அருகே குடைபிடித்துச் சென்ற மக்கள்.

Updated On :28 ஜூலை 2026, 12:39 am IST

தில்லியின் பல பகுதிகளில் திங்கள்கிழமை மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, இதே போன்ற வானிலை நிலைமகள் மாலை நேரம் வரை பல மாவட்டங்களில் தொடரும் என அறிவித்தது.

இந்த மழை, நாள்பட்ட ஈரப்பதமான சூழ்நிலையிலிருந்து ஓரளவு நிவாரணத்தை வழங்கியது. அதே நேரத்தில், பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பயணிகள் மெதுவான போக்குவரத்தை எதிா்கொண்டனா்.

மாலை 4:24 மணிக்கு வெளியிடப்பட்ட மாவட்ட அளவிலான அறிக்கையின் படி, தென் கிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, ஷாஹ்தரா, மத்திய தில்லி, வடகிழக்கு தில்லி, தெற்கு தில்லி, புது தில்லி, தென் மேற்கு தில்லி, மேற்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் வடக்கு தில்லி பகுதிகளில் மிதமான மழையுடன் இடியுடன் கூடிய மின்னல், மேலும் 30-40 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் வானிலை மையம் விடுக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.