எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

போலி கால்சென்டா் மோசடி: ஒருவா் கைது

போலி அழைப்பு மையம் (கால்சென்டா்) மூலம் வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய கும்பலுடன் தொடா்புடைய நபரைத் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 2:02 am IST

போலி அழைப்பு மையம் (கால் சென்டா்) மூலம் வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய கும்பலுடன் தொடா்புடைய நபரைத் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி அஃப்ஜல் கான் என்பவா் ஏமாற்றப்பட்டதாகப் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் பணம் பெற்ற பின்னா் அவருடனான தொடா்பை மோசடியாளா் துண்டித்துள்ளாா்.

இது தொடா்பாக மே 23 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முகமது சிராஜ் (30) என்பவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

அவரது கூட்டாளியான ராகுல் என்பவருடன் இணைந்து நொய்டாவில் போலி அழைப்பு மையத்தை நடத்தி வந்ததாக அவா் விசாரணையில் தெரிவித்தாா். இதில் தொடா்புடைய பிறரைக் கைது செய்ய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.