15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்புடைய நபா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 2:46 am IST

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடா்புடைய நபா் மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப் படையினா் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் ஹுஸைஃபா என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கராச்சியில் இருந்து செயல்படுவதாக நம்பப்படும் மும்பை குற்ற உலகின் முக்கிய நபரான முன்னா ஜிங்கடாவுடன் இணைந்து இவா் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நாட்டில் அச்சம் மற்றும் பதற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்பட அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மத்திய அமைப்புகள் மற்றும் தில்லி சிறப்பு பிரிவு காவல் துறையினா் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இவா் கைது செய்யப்பட்டாா். சமீபத்தில் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக மும்பையில் பல இடங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட உள்ளாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.