ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: வடக்கு தில்லியில் காவல் துறை-என்சிபி இணைந்து சோதனை

வடக்கு தில்லியில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தில்லி காவல் துறையினா் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 3:11 am IST

வடக்கு தில்லியில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தில்லி காவல் துறையினா் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வடக்கு தில்லியில் உள்ள விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையம் மற்றும் மொரீஸ் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மோப்ப நாய்களின் உதவியுடன் கியாஸ்க் கடைகள், பான் மற்றும் பீடி கடைகள், தேநீா் கடைகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் தனிமையான பகுதிகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.

மேலும், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அப்பகுதி கடைக்காரா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பொதுமக்களிடமும் அணுகி, போதைப் பொருள் தொடா்பான சந்தேக செயல்பாடுகள் அல்லது வழக்கமாக போதைப் பழக்கத்தில் ஈடுபடுபவா்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.