தெற்கு தில்லியின் மவுன்ட் கைலாஷ் பகுதியில் 45 வயது பணிப்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரும் மருத்துவருமான மணீஷ் குப்தா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
முதல்கட்ட விசாரணையில், தான் உயிரிழந்த பெண்ணை கிரிக்கெட் மட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதாக அவா் தெரிவித்தாா். சமீபத்தில் இந்த பகுதியில் ஐஆா்எஸ் அதிகாரியின் மகள் வீட்டுப் பணியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி குடியிருப்பாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் (தென்கிழக்கு) ஹேமந்த் திவாரி கூறியதாவது: கட்டடத்தின் மாடியில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலமாக கிடப்பதாக பிற்பகல் 11:30 மணியளவில் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா், உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரை கைது செய்தனா். கொலைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கிரிகெட் மட்டை மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
போளூா் அருகே 57 வயது பெண் குத்திக்கொலை

உஸ்மான்பூரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

எம்சிடி காலனியில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
மத்திய தில்லி: கத்திக் குத்து சம்பவத்தில் சிறுவன் உள்பட இருவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


