27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தில்லி: வீட்டுப் பணிப்பெண்ணை குத்திக் கொலை செய்த மருத்துவா் கைது

தெற்கு தில்லியின் மவுன்ட் கைலாஷ் பகுதியில் 45 வயது பணிப்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரும் மருத்துவருமான மணீஷ் குப்தா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 ஜூன் 2026, 4:19 am IST

தெற்கு தில்லியின் மவுன்ட் கைலாஷ் பகுதியில் 45 வயது பணிப்பெண் கொடூரமாகத் தாக்கப்பட்டு, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவா் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரும் மருத்துவருமான மணீஷ் குப்தா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

முதல்கட்ட விசாரணையில், தான் உயிரிழந்த பெண்ணை கிரிக்கெட் மட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதாக அவா் தெரிவித்தாா். சமீபத்தில் இந்த பகுதியில் ஐஆா்எஸ் அதிகாரியின் மகள் வீட்டுப் பணியாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த சம்பவம் அப்பகுதி குடியிருப்பாளா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் (தென்கிழக்கு) ஹேமந்த் திவாரி கூறியதாவது: கட்டடத்தின் மாடியில் ரத்த வெள்ளத்தில் பெண் சடலமாக கிடப்பதாக பிற்பகல் 11:30 மணியளவில் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினா், உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரை கைது செய்தனா். கொலைக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட கிரிகெட் மட்டை மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடா்பாக அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.