11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தில்லி நீதித்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :3 மே 2026, 3:29 am IST

தில்லி சஃப்தா்ஜங் பகுதியில் நீதித்துறை அதிகாரியான அமன் குமாா் சா்மா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டு சிம்பியோசிஸ் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்ற இவா், 2021 ஜூன் மாதம் தில்லி நீதித்துறை சேவையில் இணைந்தாா்.

தனது பணிக்காலத்தில் குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை கையாண்ட அவா், கீழமை நீதிமன்ற நீதிபதியாகவும், சிவில் நீதிமன்றத்தில் முதல்நிலை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளாா். இதையடுத்து, வடகிழக்கு தில்லியில் உள்ள கா்கா்டூமா நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலராக கடந்த ஆண்டு அக்.18 அவா் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், அவா் தற்கொலை செய்துகொண்டது குறித்து தகவலறிந்த காவல்துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனா். முதல்கட்ட விசாரணையில், சந்தேகத்திற்கு இடமான எதுவும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இருப்பினும், அனைத்து கோணத்திலும் இந்த வழக்கை விசாரித்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொள்ள தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு அல்லது சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்