சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. இதனால், பகல் நேரத்தில் வரக்கூட அச்சமான நிலை உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். கோட்டையை சிறந்தமுறையில் பராமரித்து, வெளிப் பகுதியில் நவீன வசதியுடன் கூடிய தங்கும் விடுதிகள், கழிப்பறைகள், விளையாட்டு பூங்கா, கடற்கரைக்கு எளிதான பாதை வசதி, புறக்காவல் நிலையம், பஸ் வசதி ஆகியவை செய்யும்பட்சத்தில் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என்றார் அவர்.