நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பாரதியார் வாசகர் வட்ட முப்பெரும் விழா

திருநெல்வேலி நகரம் பாரதியார் தெருவிலுள்ள அரசு கிளை நூலகத்தில் மகாகவி பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் மே தின விழா, புத்தக கண்காட்சி விழா, புற்றுநோய் விழிப்புணர்வு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 5:54 am IST

திருநெல்வேலி நகரம் பாரதியார் தெருவிலுள்ள அரசு கிளை நூலகத்தில் மகாகவி பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் மே தின விழா, புத்தக கண்காட்சி விழா, புற்றுநோய் விழிப்புணர்வு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

 விழாவுக்கு, கே. சந்திரபாபு தலைமை வகித்தார். பிரஷ்நேவ் முன்னிலை வகித்தார். பொருநை பாலு வரவேற்றார்.

 நூலக துப்புரவுப் பணியாளர் பொன்னம்மாளின் சேவையை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கப்பட்டது. உலக புத்தக தின விழா சிறப்புகள் குறித்து ஆவுடையப்பன், தளவாய் மாடசாமி, பிரஷ்நேவ் ஆகியோர் பேசினர்.

 மதர்தெரசா கேன்சர் ஹெல்த் சென்டரைச் சேர்ந்த ஹென்றி ராஜன் புற்றுநோய் குறித்து உரையாற்றினார். பங்கேற்றவர்களின் மருத்துவ கேள்விகளுக்கும் அவர் விடையளித்தார். வாசகர் வட்டச் செயலர் சிவசங்கரன் தொகுத்து வழங்கினார். ஜெயபாலன், வெங்கட், சுவாமிநாதன், சித்ரா, மீனா அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.