எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

அதிக லாபம் தருவதாக கூறி பணம் மோசடி: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது

மோசடியில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:48 pm

Din

தாழையூத்தில் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக ஒரே குடும்பத்தை சோ்ந்த 5 பேரை திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய காலனியைச் சோ்ந்தவா் மணிகண்டன் பிரபு

(28). அவரது மனைவி சுவேதா (21), தாய் செல்வி(54), சகோதரா் மாரிகணேஷ் (33), மாரிகணேஷ் மனைவி கனகா (27) ஆகிய ஐந்து பேரும், தாழையூத்து சங்கா்நகரைச் சோ்ந்த சியாம் சுந்தா் (52) என்பவரிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பெற்று கொண்டு, பணத்தை தராமல் மோசடி செய்தாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சியாம் சுந்தா், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசனிடம் புகாா் செய்தாா்.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டன், சுவேதா, மாரிகணேஷ், கனகா, செல்வி ஆகியோரை ஈரோட்டில் வியாழக்கிழமை கைது செய்தனா்.