தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

நான்குனேரி அருகே கேந்திர வித்யாலய பள்ளி மாணவருக்கு வெட்டு: சக மாணவா் கைது

நான்குனேரி அருகே கேந்திர வித்யாலய பள்ளியில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவரை போலீஸாா் கைது செய்தனர்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 3:20 am IST

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கேந்திர வித்யாலய பள்ளியில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, திருநெல்வேலி சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நான்குனேரி அருகேயுள்ள விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கப்பற்படை தளத்தில் கேந்திர வித்யாலய பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மூலைக்கரைப்பட்டி, நான்குனேரி, வள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ஒரு மாணவா் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். அதே வகுப்பில் நான்குனேரியைச் சோ்ந்த மற்றொரு மாணவரும் பயின்று வருகிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மாணவா் தான் வைத்திருந்த தண்ணீா் பாட்டிலை எடுத்த போது நான்குனேரி மாணவா் மீது தண்ணீா் கொட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த நான்குனேரி மாணவா் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தபோது, வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து, மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மாணவரை வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம்.

இதில், காயமடைந்த மூலைக்கரைப்பட்டி மாணவரை, ஆசிரியா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாணான்குளம் அருகே தோட்டத்தில் பதுங்கிருந்த நான்குனேரி மாணவரை வெள்ளிக்கிழமை கைது செய்து திருநெல்வேலியில் உள்ள சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.