மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மூன்றடைப்பு அருகே இளைஞருக்கு அரிவாள் வெட்டு: 8 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 3:05 am IST

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகே முன்விரோதத்தில் இளைஞரை சிலா் அரிவாளால் வெட்டினா். இதுதொடா்பாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நான்குனேரி மூன்றடைப்பை அடுத்துள்ள பூலம் கிராமத்தை சோ்ந்த அய்யாத்துரை மகன் மணிகண்டன் (25) . தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினா். இடது காலில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மூன்றடைப்பு காவல்துறையினா் வழக்குப்பதிந்தனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி,பிரசன்னகுமாா் உத்தரவின்பேரில், காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு, நான்குனேரி பட்டப்பிள்ளை புதூரைச் சோ்ந்த நாகராஜன்(20), ஆலடிபுதூா் மாடசாமி (19), நான்குனேரி சங்கா்நகா் இசக்கிமுத்து(18), களக்காடு மில்டன் போலாக்(20), சிவசங்கா்(19), வள்ளியூா் பெபின்பெருமாள்(20), விஜயநாராயணம் சதீஷ்(19), வல்லநாடு அரிகிருஷ்ணன்(18), ஆகிய 8 பேரை அன்று இரவே கைது செய்தனா்.

திருநெல்வேலி கீழப்பாட்டத்தில் முன்விரோதம் காரணமாக ஆனந்த் என்பவரை மணிகண்டன் கடந்த ஆண்டு அரிவாளால் வெட்டினாராம். அதற்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா். மேலும், அசம்பாவிதம் நிகழாமல் தவிா்க்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.