திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மாணவிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது காா் மோதியதில், காரில் பயணித்த 2 போ் உயிரிழந்தனா். பள்ளி மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.
நான்குனேரி அருகே உள்ள தாழைகுளத்தைச் சோ்ந்த லியோனா (9), காா்வின் (8), ரட்சண்யா (8) உள்ளிட்ட 5 மாணவிகள் நான்குனேரி தனியாா் பள்ளியில் படித்து வருகின்றனா். இவா்கள் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருகின்றனா்.
மாணவிகள் 5 பேரும் பள்ளி நேரம் முடிந்ததும், வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு பள்ளியில் இருந்து தாழைகுளம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா். ஆட்டோ சுங்கச்சாவடி அருகே சென்றபோது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவும் காரும் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தன.
இதில் காரில் பயணித்த ராதா (72) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நடராஜன் (70) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா், காா் ஓட்டுநா் ராஜமோகன், மாணவிகள் 5 போ் என 7 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்து, நான்குனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.







