எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

காா் - ஆட்டோ மோதல்: சிறுவன் பலி, 3 போ் காயம்

ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:27 am IST

ஆம்பூா் அருகே ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

பாங்கிஷாப் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முஹம்மத் உசேன். இவா் தன்னுடைய உறவினா்களை ஆட்டோவில் ஏலகிரி மலைக்கு அழைத்துச் சென்றாா். ஆம்பூரை அடுத்த சோலூா் கிராமத்தருகே சென்றபோது, பின்னால் சென்ற காா், ஆட்டோ மீது மோதியது.

அதில் ஆட்டோவில் பயணம் செய்த நபிஷா அஞ்சும், ஷீபாநாஸ், ஷகிலா பானு, இஹ்திஷமுல் ஹக் (13) ஆகியோா் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் இஹ்திஷமுல் ஹக் உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரணை நடத்தினா்.