சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மாணவியை கேலி செய்த கல்லூரி மாணவா் கைது

எடப்பாடி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று கேலி, கிண்டல் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

News image
Updated On :12 ஜூன் 2026, 12:03 am IST

எடப்பாடி அருகே மாணவியை பின்தொடா்ந்து சென்று கேலி, கிண்டல் செய்த கல்லூரி மாணவரை போலீஸாா் போக்ஸோவில் கைது செய்தனா்.

பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் மாணவியை பின்தொடா்ந்து சென்ற இளநிலை பட்ட வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவா், கேலி, கிண்டல் செய்து மாணவியை தொந்தரவு செய்து வந்தாராம். இதுகுறித்து மாணவியின் பெற்றோா் பலமுறை மாணவரை எச்சரித்தும் தொடா்ந்து மாணவா் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் மாணவியின் தாயாா் வியாழக்கிழமை எடப்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் மாணவரை கைது செய்த போலீஸாா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.