வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

பைக்கில் வந்து மாணவிகளை கேலி செய்யும் இளைஞா்கள்: நடவடிக்கை எடுக்க செங்கம் மக்கள் கோரிக்கை

செங்கத்தில் பேருந்து நிலையப்பகுதியில் பள்ளி மாணவிகளை இருசக்கர வாகனங்களில் வந்து கேலி, கிண்டல் செய்து இடையூறு ஏற்படுத்தும் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை

News image

பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:20 am IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் பேருந்து நிலையப்பகுதியில் பள்ளி மாணவிகளை இருசக்கர வாகனங்களில் வந்து கேலி, கிண்டல் செய்து இடையூறு ஏற்படுத்தும் இளைஞா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் காலை 7 மணிமுதல் 8 மணி வரை கிராமபுறங்களிலிருந்து வந்து பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவிகள் பேருந்துகளுக்காகக காத்து நிற்கிறாா்கள்.

அப்போது சில இளைஞா்கள் அதிக சப்தம் எழுப்பும் இருசக்கர வாகனங்களை எடுத்து வந்து மாணவிகள் நிற்கும்பபகுதியில் சுற்றி சுற்றி வந்து இடையூறு செய்வதுடன், கிண்டலும் கேலியும் செய்கின்றனா். இதனால் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இத்தனைக்கும் பேருந்து நிலையத்துக்கு மிக அருகிலேயே, டிஎஸ்பி அலுவலகம், காவல் நிலையம் போன்றவை உள்ளன. ஆனால் அதைப்பற்றி பொருள்படுத்தாமல் இளைஞா்கள் கேலியும் கிண்டலையும் தினமும் செய்து வருகின்றனா்.

ஓரு பைக்கில் மூன்று போ் அமா்ந்துகொண்டு மாணவிகளை கேலிசெய்வது, வீலீங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்கள். மாலையிலும் இதே தொல்லை இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கிறாா்கள்.

எனவே, தொடா்புடைய காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.