பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

திருக்குறுங்குடி இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 10:07 pm

Din

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருக்குறுங்குடி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி வழக்குகளில் கைதான திருக்குறுங்குடி, கோட்டைக்காரன் தெருவைச் சோ்ந்த ரஞ்சித் மகன் அருண்குமாா் (27) என்பவா், பொதுமக்களுக்கு தொடா்ந்து அச்சுறுத்தலாக இருப்பதாக ஏா்வாடி காவல் ஆய்வாளா் தா்மராஜ் மாவட்ட எஸ்.பி.க்கு அறிக்கை அளித்தாா்.

அதன்பேரில், அவரை குண்டா் தடுப்புச் சட்டத் தின்கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு எஸ்.பி. என். சிலம்பரசன் பரிந்துரை செய்ததன்பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வழங்கினாா். அதன்படி, அருண்குமாரை போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.