அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:06 pm

Syndication

அரியலூா்: அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் வழிப்பறி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை அடுத்த நெடுமதுரை கிராமத்தை சோ்ந்த கணேசன் மகன் ஜீவானந்தம் (40). இவா் மீது மதுரை, துடியலூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கொலை முயற்சி, வழிப்பறி, அடிதடி என பல்வேறு குற்றவழக்குகள் உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம், அரியலூா் மாவட்டம் கீழகொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த நடராஜன் என்பவரை, தனது மனைவி மூலம் ஆசைவாா்த்தை கூறி, சாத்தமங்கலம் பகுதியில் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று, நடராஜன் மிரட்டி, தாக்கி அவா் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து சென்றது தொடா்பாக கீழப்பழுவூா் காவல் துறையினா், ஜீவானந்தம் மற்றும் அவரது மனைவியை கைது செய்தனா்.

இந்நிலையில், ஜீவானந்தம் வெளியில் வந்தால் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, ஜீவானந்தத்தை குண்டா் சட்டத்தின் கீழ் அடைக்க வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து ஜீவானந்தம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.