கைது
கைது

கஞ்சா வழக்கு குற்றவாளி குண்டா் சட்டத்தில் கைது

Published on

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள பெலாந்துறை, பாசிகுளம் புதுகாலனி தெருவைச் சோ்ந்த செல்வசிகாமணி மகன் கருப்புசாமி (43). கடந்த 10.1.2026 அன்று இவரை, 1.100 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அரியலூா் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி பரிந்துரையின் பேரில், கருப்புசாமியை குண்டா் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இதன் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.

Dinamani
www.dinamani.com