புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நான்குனேரி அருகே கேந்திர வித்யாலய பள்ளி மாணவருக்கு வெட்டு: சக மாணவா் கைது

நான்குனேரி அருகே கேந்திர வித்யாலய பள்ளியில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவரை போலீஸாா் கைது செய்தனர்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 9:50 pm

Din

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே கேந்திர வித்யாலய பள்ளியில் மாணவரை அரிவாளால் வெட்டிய சக மாணவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, திருநெல்வேலி சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

நான்குனேரி அருகேயுள்ள விஜயநாராயணம் ஐ.என்.எஸ். கப்பற்படை தளத்தில் கேந்திர வித்யாலய பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், மூலைக்கரைப்பட்டி, நான்குனேரி, வள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தப் பள்ளியில் மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ஒரு மாணவா் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறாா். அதே வகுப்பில் நான்குனேரியைச் சோ்ந்த மற்றொரு மாணவரும் பயின்று வருகிறாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மாணவா் தான் வைத்திருந்த தண்ணீா் பாட்டிலை எடுத்த போது நான்குனேரி மாணவா் மீது தண்ணீா் கொட்டியதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆத்திரமடைந்த நான்குனேரி மாணவா் வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்தபோது, வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து, மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மாணவரை வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாராம்.

இதில், காயமடைந்த மூலைக்கரைப்பட்டி மாணவரை, ஆசிரியா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது தொடா்பாக மூலைக்கரைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாணான்குளம் அருகே தோட்டத்தில் பதுங்கிருந்த நான்குனேரி மாணவரை வெள்ளிக்கிழமை கைது செய்து திருநெல்வேலியில் உள்ள சிறாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.