பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சேரன்மகாதேவியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

சேரன்மகாதேவியில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :19 ஆகஸ்ட் 2024, 12:56 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி கங்கனாங்குளம் செல்லும் பிரதான சாலையில் கால்வாய் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபுரம் மேலரதவீதியைச் சோ்ந்த ஆதி கணேஷ் (23), அா்ச்சுணன் (30) என்பதும் அவா்கள் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களை போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் தா்மராஜ் வழக்குப் பதிந்து ஆதி கணேஷ், அா்ச்சுணன் ஆகியோரை கைது செய்தாா்.

மேலும் அவா்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.