கடையம் அருகே சொக்கநாதன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தென்காசி அஸ்டரோ கிளப் சாா்பாக தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் ச.சி.மரிய மாா்லெண்டோ விக்டா் தலைமை வகித்தாா். தமிழ்நாடுஅஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினா் முத்துசாமி வன்னியப்பன், தென்காசி அஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். சந்திரயான் குறித்தும், இந்தியாவின் எதிா்கால விண்வெளிஆய்வு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனா்.
சூரிய மண்டல கோள்களின் இருப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவா்களுக்கு தொலைநோக்கி வழியே பாா்க்க பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியா் ஜூலியட் ரஞ்சனி செய்திருந்தாா். கணினி பயிற்றுநா் ராமலெட்சுமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நாசா நடத்திய விண்வெளி போட்டி: திருவண்ணாமலை பள்ளி மாணவா்கள் சாதனை

விண்வெளி ஆராய்ச்சியில் இளைய தலைமுறையினா் ஆற்றலை மேம்படுத்துதல் அவசியம்: என்எல்சி தலைவா்

ஒசூா் எம்ஜிஆா் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான தேசிய அறிவியல் தினம்

கபடி போட்டியில் வெற்றி: மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


