நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரிப்பு: குளிக்கத் தடை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

News image

தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி ஆா்ப்பரித்துப் பாயும் வெள்ளம்.

Updated On :31 டிசம்பர் 2024, 7:58 pm

Din

களக்காடு: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியிலுள்ள பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், மலைப் பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவுமுதல் மழை பெய்ததால், பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, வனத்துறையினா் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனா்.

மறு உத்தரவு வரும்வரை குளிக்க தடை விதிக்கப்படுவதாகவும், பாா்வையிட தடையில்லை எனவும் வனச் சரகா் பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.