இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சேரன்மகாதேவி அருகே விபத்தில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை மாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :21 ஜூலை 2024, 2:13 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை மாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைகுளம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ஸ்ரீராம் (26). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். களக்காடு அருகேயுள்ள மேலபத்தை கிராமத்தைச் சோ்ந்த டேவிட் மகன் சீமோன் (30). சுமை ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இருவரும் நண்பா்கள். சனிக்கிழமை மாலையில் நண்பா் சீமோனை அவரது சொந்த ஊரில் கொண்டு விடுவதற்காக ஸ்ரீராம் தனது மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சேரன்மகாதேவி அருகே தனியாா் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சீமோன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஸ்ரீராம் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.