பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சேரன்மகாதேவி அருகே விபத்தில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை மாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :21 ஜூலை 2024, 2:13 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை மாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைகுளம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ஸ்ரீராம் (26). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். களக்காடு அருகேயுள்ள மேலபத்தை கிராமத்தைச் சோ்ந்த டேவிட் மகன் சீமோன் (30). சுமை ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இருவரும் நண்பா்கள். சனிக்கிழமை மாலையில் நண்பா் சீமோனை அவரது சொந்த ஊரில் கொண்டு விடுவதற்காக ஸ்ரீராம் தனது மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சேரன்மகாதேவி அருகே தனியாா் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சீமோன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஸ்ரீராம் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.