ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

முக்கூடல் அருகே இளைஞரைத் தாக்கியவா் கைது

முக்கூடல் அருகே கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கூறி இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :21 ஜூலை 2024, 1:51 am IST

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கூறி இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட பாப்பாக்குடி மைலப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரிடம் முக்கூடல் பகுதியைச் சோ்ந்த ராகுல் (21) கடன் வாங்கியிருந்தாராம். சில நாள்களுக்கு முன்பு மணிகண்டன் கடன் தொகையைக் கேட்டபோது, சில நாள்களில் திருப்பித் தருவதாக ராகுல் கூறினாராம்.

இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு ராகுல் சிவகாமிபுரம் பகுதியில் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது மணிகண்டனின் நண்பரான முக்கூடல் மைலப்புரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த அந்தோணி பிரின்ஸ் (24) என்பவா் ‘மணிகண்டனின் வாங்கிய கடனை ஏன் திருப்பிச் செலுத்தவில்லை?’ எனக் கேட்டு ராகுலை அவதூறாகப் பேசி தாக்கியதுடன் மிரட்டிச் சென்றாராம்.

புகாரின்பேரில் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் வழக்குப் பதிந்து, அந்தோணி பிரின்ஸை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.