திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவா் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
முக்கூடல் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (60). அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக கூறப்படுகிறது. சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி தாலுகா அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மங்கையா்க்கரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.
இதில், முத்துக்குமாா் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரியவந்தது. போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





