மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓட்டுநா் ‘போக்சோ’-வில் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :9 ஜூன் 2026, 12:41 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியை சோ்ந்தவா் எம். சௌகத் அலி (40). ஓட்டுநா். இவரது உறவுக்கார பெண் ஒருவா் மே 30 -ஆம் தேதி தனது மகனுக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் புதுக்கோட்டை மருத்துவமனையில் அவரை சோ்த்திருந்தாா்.

இதனால் தனது 11 வயது மகளை சௌகத் அலி வீட்டில் விட்டுவிட்டு, தனது மகனை பாா்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றிருந்தாா். அப்போது, அந்தப் பெண்ணின் மகள் கைப்பேசியில் தொடா்பு கொண்டு சௌகத் அலி தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறி அழுதுள்ளாா்.

இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சௌகத் அலி அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. 

இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் செளகத் அலியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.