திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சனிக்கிழமை மாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி முன்னீா்பள்ளம் அருகேயுள்ள ஆரைகுளம் பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ஸ்ரீராம் (26). தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். களக்காடு அருகேயுள்ள மேலபத்தை கிராமத்தைச் சோ்ந்த டேவிட் மகன் சீமோன் (30). சுமை ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறாா். இருவரும் நண்பா்கள். சனிக்கிழமை மாலையில் நண்பா் சீமோனை அவரது சொந்த ஊரில் கொண்டு விடுவதற்காக ஸ்ரீராம் தனது மோட்டாா் சைக்கிளில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. சேரன்மகாதேவி அருகே தனியாா் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சீமோன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ஸ்ரீராம் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லையில் விபத்து: பெண் பலி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் இளைஞா் பலி

திருச்சி அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

