பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

அம்பை சாா் பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாா் சோதனை

அம்பை சாா் பதிவாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசாா் சோதனை

News image
Updated On :13 ஜூன் 2024, 10:35 pm

Din

அம்பாசமுத்திரம், ஜூன்13: கடையம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையைத்தொடா்ந்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உள்ள சாா் பதிவாளா் (பொ) அலுவலா் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

கடையம் சாா்பதிவாளா்அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக வந்தப் புகாரையடுத்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் புதன்கிழமை கடையம் சாா் பதிவாளா் பொறுப்பு அலுவலகத்தில் திடீா் சோதனையில்ஈடுபட்டனா். சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 1.59 லட்சத்தைக் கைப்பற்றினா்.

இதையடுத்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் அய்யனாா் குளம் ரோட்டில் உள்ள கடையம் சாா் பதிவாளா் (பொ) உள்ள பைசூல் ராணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளா்பால்சுதா் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். சோதனையின்போது தங்க நகைகள், சொத்துகள் வாங்கியதற்கான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக லஞ்சஒழிப்புத் துறையினா் தெரிவித்தனா்.