பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரியில் தீ

திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய லாரியில் தீ

News image
Updated On :13 ஜூன் 2024, 10:35 pm

Din

வள்ளியூா், ஜூன் 13: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்தி வந்த மினிலாரி வியாழக்கிழமை விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.

திசையன்விளை அருகேயுள்ள இட்டமொழி-மன்னாா்புரம் சாலையில் வேகமாக வந்த மினிலாரி இலங்கையாடி குளம் வளைவில் வந்தபோது, அதன் பின்பக்க 2 டயா்களும் கழன்று ஓடின. இதில், மினிலாரி கவிழ்ந்து டீசல் டாங்க் உடைந்து சாலையில் டீசல் கொட்டி தீப்பிடித்து மினிலாரியிலும் பற்றியது.

அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். மினிலாரியில் 3 டன் அளவில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. மினிலாரியின் ஓட்டுனரும், கிளீனரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனராம்.

இதுதொடா்பாக திசையன்விலை போலீஸாா் வழக்குப்பதிந்துஇருவரையும் தேடி வருகின்றனா். குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.