மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நான்குனேரி அருகே காா்-பைக் மோதல்: 2 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி நான்குவழிச் சாலை சுங்கச்சாவடி அருகே காரும், பைக்கும் வியாழக்கிழமை இரவு மோதிக்கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

Updated On :1 மார்ச் 2024, 3:54 pm

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி நான்குவழிச் சாலை சுங்கச்சாவடி அருகே காரும், பைக்கும் வியாழக்கிழமை இரவு மோதிக்கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா். நான்குனேரி அருகேயுள்ள ஸ்ரீரெங்கராஜபுரத்தை சோ்ந்தவா் மகேஷ் மற்றும் 2 போ் மூன்றடைப்பில் இருந்து திருநெல்வேலிக்கு பைக்கில் வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனா். அப்போது, நான்குனேரி சுங்கச்சாவடி அருகே அவா்களது பைக்கும், எதிரே காரும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். அதில், மகேஷும், உடன் வந்தவா்களில் ஒருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனா். மற்றொருவரும், காரில் வந்த 2 பேரும் பலத்த காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.