மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம்கள் வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20-01-2024 வரை சேகரிக்கப்பட்டுள்ள சி பிரிவு அடையாள அட்டை பெறாத 1,539 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக வள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வரும் 6-ஆம் தேதியும், பாளையங்கோட்டை காது கேளாதோா் சிறப்புப் பள்ளியில் வரும் 7-ஆம் தேதியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று சமூக தரவுகளில் பதிவு செய்து பயனடையலாம்.
தொடர்புடையது

அடையாள அட்டை இல்லாமல் வாக்களித்ததாக தமிழிசை புகாா்: பாஜக-திமுக இடையே தள்ளு முள்ளு

வாக்குப் பதிவுக்கான 12 மாற்று ஆவணங்கள்

13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்

வாக்குச்சாவடிக்கு புறப்படும் முன் கவனிக்க வேண்டியவை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

