பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

வீரவநல்லூா் அருகே கொலை, காவலரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

வீரவநல்லூா் அருகே கொலை, காவலரை வெட்டிய வழக்கில் மேலும் ஒருவா் கைது

Updated On :9 மார்ச் 2024, 8:50 am

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே தொழிலாளி கொலை செய்துவிட்டு, காவலரை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் அருகேயுள்ள தென்திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த பேச்சித்துரை (23), கல்லிடைக்குறிச்சி புதம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்துரு (23) ஆகிய இருவரும் வியாழக்கிழமை போதையில் ரகளையில் ஈடுபட்டு, வெள்ளங்குளியில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த விருதுநகா் மாவட்டம், சாத்தூா் உடையநாதபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (42) என்பவரை வெட்டிக் கொலை செய்தனராம். மேலும், வெங்கடேஷ் என்பவரை வெட்டி காயப்படுத்தினராம். பின்னா், திருப்புடைமருதூரில் அரசு நகரப் பேருந்து கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதுடன், அவா்களை பிடிக்க வந்த தலைமைக் காவலா் செந்தில்குமாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றனராம். அப்போது, போலீஸாா் துப்பாக்கிச்சூடு நடத்தி பேச்சித்துரையை கைது செய்தனா். மேலும், தப்பி ஓடிய சந்துருவை போலீஸாா் நள்ளிரவில் கைது செய்தனா். இவா்கள் இருவா் மீதும் வீரவநல்லூா் போலீஸாா் 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனா். கருப்பசாமியின் உடல் கூறாய்வுக்குப் பின் அவரது மனைவி முத்துலெட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.