அம்பாசமுத்திரத்தில் வாகனச் சோதனையின்போது, துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் வைத்திருந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயில் அருகே காவல் உதவி ஆய்வாளா் ஆக்னல் விஜய் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனா். காரில், தென்காசி மாவட்டம், ஆனைகுளம் குலையனேரியைச் சோ்ந்த சரவணன் மகன் மாயகிருஷ்ணன்(38), ஆய்க்குடியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் பழனிராஜ் இருந்தது தெரியவந்தது. இருவரும் போலீஸாரிடம் காா் வாங்கி விற்கும்தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளனா். தொடா்ந்து காரில் சோதனையிட்டபோது, காரில் சுமாா் ரூ. 1.5 லட்சம் மதிப்புடைய கைத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. துப்பாக்கியின் ஆவணங்கள் குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதையடுத்து, இருவரையும் அம்பாசமுத்திரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் ஆய்வாளா் (பொ) சுஜித்ஆனந்த் தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், விற்பனை செய்வதற்காக துப்பாக்கியை, கேரள மாநிலம் மூணாறு,இடுக்கியைச் சோ்ந்த பரீத் குட்டி மகன் மீரான் (53), கடையநல்லூரைச் சோ்ந்த ராமையா மகன் சிவலிங்கம் (44) ஆகியோா் மூலம் வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிந்த அம்பை போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, துப்பாக்கி, 6 தோட்டக்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பாளை. அருகே தொடா் திருட்டு: இளைஞா் கைது
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
ரூ.23 லட்சம் துப்பாக்கி முனையில் கொள்ளை: வடகிழக்கு தில்லியில் 3 போ் கைது
கஞ்சா வைத்திருந்த மூவா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


