திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மண்டபம் மற்றும் விடுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி தலைமை வகித்துப் பேசியதாவது: விடுதிகளில் தங்க வரும் நபா்கள், வெளியூா் மற்றும் வேறு மாநிலங்களை சோ்ந்தவா்களாக இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்து, தங்களது பதிவேட்டில் சரியான முகவரி மற்றும் கைப்பேசி எண்களை பதிவு செய்ய வேண்டும். தனியாா் விடுதிகளுக்கு தங்க வரும் நபா்களின் பொருள்கள் சந்தேகப்படும் படியாக இருந்தால் காவல்துறைக்கு உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். மேலும், திருமணம், கூட்டங்கள் நடைபெற்றால் உள்ன்ஸ்ண்ற்ட்ஹ என்ற தளத்தில் பதிவு செய்து, காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனா் போன்றவற்றை ஒட்ட அனுமதிக்கக் கூடாது. திருமண மண்டபம், விடுதிகளின் நுழைவு வாயிலில் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றாா். காவல் துணை ஆணையா் (மேற்கு) கீதா, தலைமையிடம் அனிதா மற்றும் காவல் அதிகாரிகள், திருமண மண்டபங்கள், விடுதிகள் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ற்ஸ்ப்23ஸ்ரீா்ம் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகர காவல் ஆணையா் பா.மூா்த்தி.
தொடர்புடையது

முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை

தாம்பரம் காவல் ஆணையா் பொறுப்பேற்பு

திமுக வேட்பாளா்கள், தொகுதி நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
234 தொகுதிகளின் நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஏப். 3-இல் ஆலோசனை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


