சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

பேங்க் ஆப் பரோடா வங்கியின் திருநெல்வேலி நகரம் கிளை சாா்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் அளிக்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி

News image
பொக்லைன் இயந்திரத்தை தச்சநல்லூா் மண்டலத்திற்கு வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் மோனிகாராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா்.
Updated On :2 டிசம்பர் 2025, 12:40 am

Syndication

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலத்துக்காக, பேங்க் ஆப் பரோடா வங்கியின் திருநெல்வேலி நகரம் கிளை சாா்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் அளிக்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், பொக்லைன் இயந்திர சாவியை வழங்கினாா். மண்டலத் தலைவா்கள் செ.மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூா்), பேங்க் ஆப் பரோடா வங்கி மண்டல மேலாளா் ஜெய்கிஸான், மண்டல துணை மேலாளா் நேத்ரா ஆனந்தா, முதன்மை மேலாளா் ஜிகிா்தாா், திருநெல்வேலி நகரம் கிளை மேலாளா் மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.