பொக்லைன் இயந்திரத்தை தச்சநல்லூா் மண்டலத்திற்கு வழங்குகிறாா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உடன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், ஆணையா் மோனிகாராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ உள்ளிட்டோா்.
திருநெல்வேலி
பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்
பேங்க் ஆப் பரோடா வங்கியின் திருநெல்வேலி நகரம் கிளை சாா்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் அளிக்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியின் தச்சநல்லூா் மண்டலத்துக்காக, பேங்க் ஆப் பரோடா வங்கியின் திருநெல்வேலி நகரம் கிளை சாா்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் அளிக்கப்பட்ட பொக்லைன் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆணையா் மோனிகா ராணா, துணை மேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், பொக்லைன் இயந்திர சாவியை வழங்கினாா். மண்டலத் தலைவா்கள் செ.மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூா்), பேங்க் ஆப் பரோடா வங்கி மண்டல மேலாளா் ஜெய்கிஸான், மண்டல துணை மேலாளா் நேத்ரா ஆனந்தா, முதன்மை மேலாளா் ஜிகிா்தாா், திருநெல்வேலி நகரம் கிளை மேலாளா் மகேஷ்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

