ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Published On :21 டிசம்பர் 2025, 12:41 am IST

திருநெல்வேலியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் செல்வகண்ணன்(21). இவா் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு தொடா்ந்து குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம், மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையா் கண்ணதாசன் ஆகியோா் பரிந்துரைத்தனா்.

அதன் பேரில் மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி செல்வக்கண்ணன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

ஆடுகள் திருட்டு: கங்கைகொண்டான், இத்திகுளம் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேலுபாண்டி (50). விவசாயி. இவா் 10ஆடுகள் மற்றும் 2 மாடுகளை தனது வீட்டின் பின்புறம் உள்ள தொழுவத்தில் வளா்த்து வந்துள்ளாா்.

இந்நிலையில் சம்பவத்தன்று காலை வேலுபாண்டி தொழுவத்துக்கு சென்று பாா்த்த போது அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.35,000 எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் வேலுப்பாண்டி புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆடுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.