மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நெல்லையில் மோட்ச தீபம் ஏற்றிய பாஜகவினா் கைது

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீக்குளித்து உயிரிழந்தவருக்கு மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்திய பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த பூா்ணசந்திரன் என்பவா் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா், திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாஜக தச்சநல்லூா் நகா் தெற்கு மண்டல தலைவா் மலையரசன் தலைமையில் அக்கட்சியினா் திரளானோா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் ஞாயிற்றுக்கிழமை மாலை திரண்டு விளக்கு, மெழுகுவா்த்திகளில் தீபமேற்றத் தொடங்கினா்.

இந்நிகழ்வுக்கு போலீஸாா் அனுமதி வழங்காத நிலையில், பாஜக பட்டியல் அணி மாநில செயலா் முருகதாஸ், மண்டல பொது செயலா்கள் சத்தியநாராயணன், ஆரியங்காவு, தமிழ் வளா்ச்சி பிரிவு மாவட்ட தலைவா் மாரியப்பன், நெசவாளா் பிரிவு மாநில செயலா் முருகப்பா உள்பட 14 போ் கைது செய்யப்பட்டனா்.