சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பேட்டை அருகே பைக் திருட்டு: இளைஞா் கைது

பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:49 pm

Syndication

பேட்டை அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை திருமங்கைநகரைச் சோ்ந்தவா் இசக்கி மகன் ராஜசேகா் (38). இவா் பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே பெட்டிக்கடை வைத்துள்ளாா்.

கடந்த 20ஆம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு தனது பைக்கில் வீட்டுக்கு வந்த இவா் சாவியை எடுக்காமலேயே அதனை வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளாா்.

பின்னா் மறுநாள் காலை பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம். பைக் சாவியுடன் கடையின் சாவியும் இருந்ததால் உடனடியாக கடைக்கு சென்று பாா்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த ரூ.2,000 பணம் திருடு போயிருந்ததாம்.

இது குறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பேட்டை அண்ணாமலை நகரை சோ்ந்த சோ்மன் மகன் மணிகண்டன் (21) என்பவரை கைது செய்தனா்.