மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மெத்தைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 20 லட்சம் பொருள்கள் எரிந்து சாம்பல்

கடையம்அருகே கருத்தலிங்கபுரத்தில் செயல்படும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 7:50 pm

Syndication

கடையம்அருகே கருத்தலிங்கபுரத்தில் செயல்படும் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் தீயில் எரிந்து சாம்பலானது.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அங்கப்பபுரம் கிராமத்தைச் சோ்ந்த தங்கச்சாமி என்பவா் கருத்தலிங்கம்புரத்தில் சோபா, மெத்தைகள் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென பஞ்சு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி அனைத்துப் பொருள்கள் மீதும் பிடித்தது. தகவல் அறிந்ததும் ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பு பொருள்கள் எரிந்து சேதமானதாகத் தெரிகிறது. இதுகுறித்து கடையம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.