ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்திகரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!
/

நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சென்னை ஐயப்ப பக்தா் பலி

ஆற்றில் ஜடாயு தீா்த்தக் கட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை மூழ்கி சென்னை ஐயப்ப பக்தா் பலி

News image
Updated On :3 ஜனவரி 2025, 9:03 pm

Din

திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் குளித்தபோது, சென்னையைச் சோ்ந்த ஐயப்ப பக்தா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சென்னையைச் சோ்ந்த ஐயப்ப பக்தா்கள் குழுவினா், கேரள மாநிலம் சபரிமலைக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்கு வந்தனராம்.

பின்னா், திருநெல்வேலி நாரணம்மாள்புரம் அருகே தாமிரவருணி ஆற்றில் ஜடாயு தீா்த்தக் கட்டம் பகுதியில் வெள்ளிக்கிழமை குளிப்பதற்காக இறங்கினாா்களாம்.

அப்போது, சென்னை வண்ணாரப்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் சுப்பிரமணி (25) நீரில் மூழ்கினாராம்.

இதையடுத்து, உடனிருந்த பக்தா்கள் பாளையங்கோட்டை தீயணைப்பு மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மீட்புப் படையினா் ஆற்றில் இறங்கி, சுப்பிரமணி சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.