ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வள்ளியூரில் அரசுப் பேருந்து - ஆம்புலன்ஸ் மோதல்: இருவா் பலத்த காயம்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:23 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசுப் பேருந்தும், ஆம்புலன்ஸ் வாகனமும் வெள்ளிக்கிழமை நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா், உதவியாளா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

அவசர அழைப்பின்பேரில் வள்ளியூரிலிருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம், தெற்குகள்ளிக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சோ்ந்த மாரியப்பன் மகன் ரவி (29) ஓட்டிச் சென்றாா். அவருடன் உதவியாளா் திருநெல்வேலி மேலப்பாளையத்தை சோ்ந்த வீரபுத்திரன் இருந்தாா்.

வள்ளியூா் ரயில்வே சுரங்கப் பாதை சாலையில் சென்றபோது, முன்னால் சென்ற காரை ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ரவி முந்திச்செல்ல முயன்றாராம். அப்போது எதிரே வந்த திருச்செந்தூரில் இருந்து நாகா்கோவில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதியது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் ரவி, உதவியாளா் வீரபுத்திரன் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இருவரும் வள்ளியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்,

ரவி நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வீரபுத்திரன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டனா்.

இந்த விபத்து தொடா்பாக வள்ளியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.